முதல் சம்மனிற்கு ஆஜராகவில்லை என்பதால் "காட்மேன்" வெப் சீரிஸ் இயக்குனர், தயாரிப்பாளருக்கு 2-வது சம்மனை கொடுத்துள்ளது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.
குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவதூறாக வசனங்கள் இடம்பெற்றிருந்ததாக பாஜக உள்பட 5 அமைப்புகள் சார்பில் "காட்மேன்" வெப்சீரிஸ்க்கு தடை விதிக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து "காட்மேன்" வெப் சீரிஸ் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் கொடுத்தனர். 3-ம்தேதி காலை 10 மணிக்கு விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் போலீசார் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் சம்மன்படி 3-ம்தேதி இருவரும் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இந்நிலையில் 2-வது சம்மனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோருக்கு கொடுத்துள்ளனர். வருகிற 6-ம்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் போலீசார் தெரிவித்துள்ளனர். 6-ம்தேதி விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்