மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நடக்க முடியாத சிறுமியை அவரது தந்தை கையில் சுமந்து சென்ற சம்பவம் சேலம் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வம். இவரது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என நேற்று பிற்பகல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுமியால் நடக்கமுடியவில்லை எனத் தெரிகிறது. ஆனால் அவருக்கு சக்கர நாற்காலியோ அல்லது ஸ்ட்ரெச்சரோ கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து சிறுமியை அவரது தந்தை கைகளில் தூக்கிக்கொண்டு வெளியே வந்துள்ளார்.
இதனை அங்கிருந்த ஊடகத்தினரும், பொதுமக்களும் செல்போனில் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அரசு மருத்துவமனை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று அவரது மகளுக்கு ஸ்ட்ரெச்சர் உதவி வழங்கி வெளியே அனுப்பி வைத்தனர். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
“தோனியின் டீம் மீடிங் வெறும் 2 நிமிடம் தான்” - பார்திவ் படேலின் நினைவுகள்
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்