தமிழக கேரள எல்லையில் வெட்டுக்கிளிகளால் எவ்வித சேதமும் இல்லை என தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழக கேரள எல்லையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பதாகவும், பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்து கூடலூர் - நீலகிரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழக கேரள எல்லையில் வெட்டுக்கிளி கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி வருதாக செய்தி வெளியானது. இதனையடுத்து தமிழக-கேரள எல்லையில் ஆய்வு மேற்கொண்டதில் வெட்டுக்கிளிகளால் எவ்வித சேதமும் இல்லை என்ற விபரம் தெரியவந்தது.
மேலும் இது குறித்து கேரள விவசாயத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டதில், அங்கு புல்பள்ளி பகுதியில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் ஆலர்சஸ் மில்லேரியஸ் என்னும் தாவர பெயர் கொண்ட புள்ளி வெட்டுக்கிளிகளே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது காப்பி லோகஸ்ட் என்னும் பொதுப்பெயரைக் கொண்டது. இது பயிர் சேதம் ஏற்படுத்தும் லோகஸ்ட் வகையை சேர்ந்தவை அல்ல.
இவை இலைகளை மட்டுமே உன்பதால்பயிர் சேதம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அவை இளம் பருவத்திலிருந்து பெரிய வெட்டுக்கிளிகளாக மாறி வருவதாக் அவைகள் இடம் பெயர்ந்து வருகின்றன என்ற விபரம் கேரள வேளாண்மைத்துறை அதிகாரி அவர்களால் தெரிவிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘வாடகை வாங்காமல், உணவளித்த காவலர்’ - கையெடுத்துக் கும்பிட்ட வடமாநிலத்தவர்கள்..!
Loading More post
ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி