இந்திய-சீன எல்லைப் பிரச்னையை பேசித் தீர்க்க மத்தியஸ்தராக இருக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்
இந்திய - சீன எல்லையில் சில நாள்களாகப் பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த 5ம் தேதி காஷ்மீர் அருகே உள்ள கிழக்கு லடாக் பகுதிக்குள்
சீன வீரர்கள் புகுந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்பும் தாக்கிக்கொண்டனர். இரு நாட்டு ராணுவ உயர்
அதிகாரிகளும் தலையிட்டதை அடுத்து அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் வட கிழக்கு மாநிலமான சிக்கிமிலும், சீன எல்லையில் வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதனிடையே சில நாள்களுக்குப் பிறகு சீன ராணுவ ஹெலிகாப்டர் அத்துமீறி நுழைந்ததாகவும் கூறப்பட்டது. இப்படி தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய-சீன எல்லையில் இருதரப்பினரும் வீரர்களைக் குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், இந்திய-சீன எல்லைப் பிரச்னையை பேசித் தீர்க்க மத்தியஸ்தராக இருக்க அமெரிக்கா தயாராக இருக்கிறது. இது குறித்து இந்தியா மற்றும் சீனாவிடம் தெரிவித்துள்ளோம் என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"விராட் கோலி தனது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும்" - பாஜக எம்எல்ஏ !
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?