கொரோனா பொதுமுடக்கத்தின் எதிரொலியால் ஓட்டுநர்கள் உட்பட 600 ஊழியர்களை ஊபர் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலியால் உலகில் பெரும்பாலான நாடுகளில் பொதுமுடக்கம் அலபடுத்தப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் வருமான இழப்பை சந்தித்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் டாக்ஸி நிறுவனங்களான ஊபர், ஓலா உள்ளிட்டையும் சரிவடைந்தன.
இதனால் தங்கள் ஊழியர்களை ஓலா நிறுவனம் பணிநீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஊபர் நிறுவனமும் ஓட்டுநர்கள் உட்பட 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அத்துடன் தங்கள் நிறுவன வேலைப்பாடுகளை 25% குறைத்துள்ளது. பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 10 முதல் 12 வாரங்களுக்கான ஊதியம் வழங்கப்படும் எனவும், 6 மாதங்களுக்கான மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கு முடிந்த அளவு வெளிப்புற ஆதரவினையும் செய்து தர ஏற்பாடு செய்யப்படிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஊபர், ஓலா மட்டுமின்றி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான சொமோடோ மற்றும் சுவிக்கி ஆகியவையும் அண்மையில் ஆட்குறைப்பு செய்துள்ளன.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்