கடந்த 16-ம் தேதி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ராஜஸ்தானில் இருந்துச் சென்ற லாரி உத்தரப் பிரதேசத்தின் ஆரையா பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களில் 11 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த இந்த விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் உத்தரப்பிரதேச அரசு உயிரிழந்தவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கண்டனம் தெரிவித்துள்ளார். விபத்தில் பலியானவர்களின் உடல்களை திறந்த லாரியில் கருப்பு தார்பாய் மூலம் மூடி அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே லாரியில் காயமடைந்தவர்களையும் அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து தெரிவித்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மனிதத்தன்மையில்லாத இந்த செயலை உத்தரப்பிரதேச அரசு தவிர்த்திருக்க வேண்டும். மாநில எல்லை வரை உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன் என தெரிவித்தார். இதனை அடுத்து லாரியில் இருந்து உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஜார்க்கண்ட் கொண்டு செல்லப்பட்டது.
How UP was sending bodies of workers killed in #AuraiyaAccident home. Bags of plastic on ice slabs in open truck.. .. The ice melted. Will our hearts remain frozen? pic.twitter.com/Ue1K7IFtPT
— barkha dutt (@BDUTT) May 19, 2020Advertisement
இலங்கை டூ இந்தியா : இந்தியர்கள் தாயகம் திரும்ப கப்பல்..!
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?