பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்திருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிவரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு கொரோனா காலத்தில் மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் தேர்வுகளை நடத்துவதா என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் பத்தாம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தலாமா அல்லது ஒத்திவைக்கலாமா என்பது குறித்து இன்று முதலமைச்சருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், ஜூன் 1 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிவித்தார். அதன்படி,
ஜூன் 15 - மொழிப்பாடம்
ஜூன் 17 - ஆங்கிலம்
ஜூன் 19 - கணிதம்
ஜூன் 22 - அறிவியல்
ஜூன் 24 - சமூக அறிவியல்
ஜூன் 25 - தொழில்கல்வி தேர்வு
மேலும் மார்ச் 26 ஆம் தேதி நடத்தப்பட இருந்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (வேதியியல், புவியியல், கணக்கியல்) ஜூன் 16 ஆம் தேதி நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி