கொரோனா நேரத்தில் மக்களிடம் ஆன்லைன் பயன்பாடானது முன்பை விட அதிகரித்துள்ளது. இதில் கொரோனா குறித்த தவறான செய்திகள், அச்சுறுத்தும் கொரோனா புகைப்படங்கள் போன்றவற்றை சிலர் சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து அண்மையில் மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பும் கேட்டுக்கொண்டது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பதற்கான நேர அளவு குறைக்கப்பட்டது.
தொழில் நுட்ப ரீதியிலான சிக்கல்களை சமாளிப்பதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவை குறைத்ததாக தெரிவித்தது. ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவு 30 வினாடி வரை வைக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அது 15 வினாடிகளாக குறைக்கப்பட்டது. வாட்ஸ்அப் சர்வர் தங்குதடையின்றி இயங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த ஸ்டேட்டஸ் நேர அளவு குறைப்பிற்கு பயனாளர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவை 15 விநாடிகளில் இருந்து 30 விநாடிகளாக மீண்டும் உயர்த்தியுள்ளது வாட்ஸ் அப். வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்தால் இந்த புதிய நேர அளவை பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
4.5ல் இருந்து 2: ஸ்டார் மதிப்பீட்டில் பாதாளத்திற்குச் சென்ற டிக்டாக்.. ஏன் தெரியுமா?
Loading More post
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?