வழிப்பாட்டு தலங்களை திறந்தால் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் மக்கள் கூடக்கூடிய திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் வழிப்பாட்டு தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், மத வழிப்பாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் தெரிவித்தது. மேலும், பாதுகாப்பு அளிக்க போதுமான காவலர்கள் இல்லை எனவும், மத்திய அரசு மத வழிபாட்டுத் தலங்களை திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதையும் குறிப்பிட்டது.
தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், அனிதா சுமந்த் அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Loading More post
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகம் - மருத்துவமனை தகவல்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11ம் கட்ட பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டப்படுமா?
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!