சென்னையில் அத்தியாவசிய, அவசரப் பணிகளுக்காகவும் மற்றும் அரசு ஊழியர்களுக்காகவும் 200 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் நீட்டிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் நேற்றுமுடன் முடிவுக்கு வரவிருந்தது. இந்நிலையில் மே 31ஆம் தேதி வரை தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். அத்துடன் பல்வேறு தளர்வுகளை அவர் வெளியிட்டிருந்தார். குறிப்பாக, அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையில் 200 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய, அவசரப் பணிகள் மற்றும் 50% அரசு ஊழியர்களுக்காக இந்த பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Loading More post
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
கொரோனா கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் இன்று ஆலோசனை!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி