கேரள மாநிலத்தில் முதல் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற மெட்ரோ ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் சதாசிவம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் பளரிவட்டம் தொடங்கி பத்தடிபாலம் வரை மெட்ரோ ரயிலில் பயணமும் மேற்கொண்டார். முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மெட்ரோமேன் என்றழைக்கப்படும் ஸ்ரீதரன் ஆகியோரும் மோடியுடன் பயணித்தனர்.
கேரள மெட்ரோ ரயில்சேவை பல வழிகளில் தனித்துவம் கொண்டாதாக திகழ்கிறது. 5008 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோமீட்டர் தொலைவிலான இந்த மெட்ரோ ரயிலின் முதல் கட்ட பணி 45 மாதங்களிலேயே முடிக்கப்பட்டது. மெட்ரோ ரயிலுக்கான ஒட்டுமொத்த மின் தேவையில் கால் பங்கு சூரிய சக்தி மூலம் பெறும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் தூண்களில் வெர்டிகல் கார்டன், அமைக்கப்பட உள்ளது. அதிக எண்ணிக்கையில் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்களும் பணி புரியும் மெட்ரோ ரயில் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?