ஊரடங்கு உத்தரவுக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் தினசரி கூலித்தொழிலாளர்கள் வேலையின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊரைத் தேடி பயணிக்க ஆரம்பித்தனர். பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து தொழிலாளி ஒருவர் தன் கர்ப்பிணி மனைவியுடன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தன்னுடைய கிராமத்திற்கு நடந்தே சென்றுள்ளார்.
செல்லும் வழியிலேயே கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட சாலையிலேயே அவர் குழந்தை பெற்றுள்ளார். இது குறித்து தெரிவித்த அப்பெண்ணின் கணவர், குழந்தை பிறந்து 2 மணி நேரம் ஓய்வு எடுத்தோம். அதன் பிறகு 150கிலோமீட்டர் நடந்து சென்றோம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த சாட்னாவின் மருத்துவ அதிகாரி ஒருவர், அவர்கள் குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்ததும் பேருந்து மூலம் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தாயும் சேயும் நலமாக உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
சாலையில் அடிப்பட்டுக் கிடந்த தொழிலாளி - 12 மணிநேரத்திற்குப் பின் மீட்பு
Loading More post
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
ஐபிஎஸ் அதிகாரிக்கே இவ்வளவு சிக்கலென்றால் சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன?- உயர் நீதிமன்றம்
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?