கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் சித்த மருத்துவர் எனப்படும் திருத்தணிகாசலத்தை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கொரோனோ நோய்க்கு மருந்து இருப்பதாகக் கூறி விளம்பரம் செய்ததற்காக, சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மே 6ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருக்கிறார்
இந்திய மருத்துவத்துறை அளித்த புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட திருத்தணிகாசலத்தை, 7 நாள் காவிலில் வைத்து விசாரிக்க சென்னை காவல்துறை எழும்பூர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், மே 18ஆம் தேதி வரை திருத்தணிகாசலத்தை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
முன்னதாக, பொதுமக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குநர் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை ஐடி சட்டத்திலும், அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டது மற்றும் நோய்த்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்தனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?