இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அவர் கோபப்பட்ட தருணத்தையும் பகிர்ந்துள்ளார் முன்னாள் ஆல் ரவுண்டரான இர்பான் பதான்.
சமீபகாலமாக தோனியுடனான அனுபவங்கள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் வேறு எதையாவது பேசினாலும் கூட, அவர்களிடம் தோனி குறித்து ஒரு கேள்வியையாவது தொகுப்பாளர் மற்றும் செய்தியாளர்கள் முன் வைத்துவிடுகின்றனர். இதனால் பேட்டியளிப்பவர்களும் தோனி குறித்த கருத்தை பேசிவிடுகின்றனர்.
அந்த வகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கன்னெக்டெட் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், தோனி கோபமடைந்த தருணம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் கூறும்பொதும், “அந்தச் சம்பவம் 2006-07ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது அணியினர் அனைவரும் பயிற்சி மேற்கொண்டிருந்தோம். எங்களுக்குள்ளேயே இரண்டு அணிகளாக பிரித்துக்கொண்டு, வலதுபுறம் பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்கள் இடதுபுறம் ஆட வேண்டும் எனவும், இடதுபுறம் பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்கள் வலதுபுறம் ஆட வேண்டும் என தீர்மானித்துக்கொண்டோம்.
அப்போது தோனி எதிர்பாராத விதமாக அவுட் ஆகிவிட்டார். உடனே அவர் கடுப்பாகி தனது பேட்டை வீசிவிட்டு, தன்னைத் தானே திட்டிக்கொண்டு சென்றுவிட்டார். பின்னர் நீண்ட நேரத்திற்குப் பின்னே பயிற்சிக்கு திரும்பினார். அவர் மிகவும் கோபமடைந்திருந்தார்” என்று தெரிவித்தார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்