ஆந்திராவில் தனிமனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே17ம் தேதிக்கு பிறகு தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பேருந்து சேவைகள் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது. கொரோனா பாதித்த இடங்களின் நிலைமையைப் பொருத்து பேருந்து சேவை தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திராவில் தனிமனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக 100 சொகுசு பேருந்துகளில் இருக்கைகள் மாற்றப்பட்ட இடைவெளியுடன் 3 வரிசைகளாக இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் 36 இருக்கைகள் கொண்ட பேருந்தில் தற்போது 26 இருக்கைகள் உள்ளன. இந்த திட்ட வடிவம் மற்றும் மாதிரி புகைப்படங்கள் ஆந்திர முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவரது முடிவுக்கு ஏற்ப அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆந்திர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதனால் பணமில்லா பரிவர்த்தனை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மே18க்குள் 100 பேருந்துகள் மாற்றி அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்குமென்றும், மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆந்திர அரசு முடிவு எடுக்கும் என்றும் தெரிகிறது.
ஊரடங்கில் குடிசை வீட்டை தன் கலைத்திறனால் அலங்கரித்த ஏழை மாணவன் !
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!