கொரோனா பரவல், இரட்டை கோபுர தாக்குதலை விட மோசமானது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,073 பேர் வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 12 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், கொரோனா பரவல் மோசமான தாக்குதல் என்றும் இது போன்ற தாக்குதலை உலகம் ஒருபோதும் சந்தித்தது இல்லை என்றும் தெரிவித்தார். கொரோனா பரவலைச் சீனா ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் எனக்கூறிய அவர், சீனாவைக்காட்டிலும் அமெரிக்காவிலேயே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதால் இது கண்ணுக்குத் தெரியாத எதிரியின் தாக்குதல் என வேதனை தெரிவித்தார்.
இந்த கொரோனா பரவல் இரண்டாம் உலகப்போரில் பியர்ல் ஹார்பர் துறைமுகத்தின் மீது ஜப்பானிய குண்டுத் தாக்குதல் மற்றும் இரட்டை கோபுர தாக்குதலை விட மோசமானது என்றும் அதிபர் ட்ரம்ப் கூறினார்.
Loading More post
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
ஐபிஎஸ் அதிகாரிக்கே இவ்வளவு சிக்கலென்றால் சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன?- உயர் நீதிமன்றம்
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?