மே 17ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டித்தால் மாநில பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை. மே 17ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டித்தால் மாநில அரசின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும். மக்களின் உயிர் முக்கியம் தான், ஆனால் மக்களுக்கு உணவளிக்க மாநில அரசுக்கு பொருளாதாரம் தேவைப்படுகின்றது. ஆகவே அடுத்த ஊரடங்கு முடிவை பிரதமர் எடுப்பதற்கு முன்பு மாநில முதலமைச்சர்களை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
“இல்லையெனில் மாநில அரசு கேட்கும் நிதியையாவது மத்திய அரசி வழங்க வேண்டும். மேலும் கொரோனா பாதித்த பகுதிகளை நிற அடிப்படையில் பிரிப்பதை மத்திய அரசு முடிவெடுக்கக்கூடாது. அதை மாநில அரசின் நிர்வாகத்திற்கு விட்டு விட வேண்டும். அப்போது தான் அனைத்து பகுதி மக்களையும் முழுவதுமாக நிர்வகிக்க முடியும்” என அவர் கூறினார்.
கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், பின்னர் மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது மே 17ஆம் தேதி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!