பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து அரசுப் பள்ளி ஆசிரியை பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிறு, குறு தொழிலாளர்கள், அன்றாடம் வேலைக்கு போய் வருமானம் ஈட்டுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியை.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கருப்பம்புலம் கிராமத்தில் உள்ளது ஞானாம்பிகா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி. இப்பள்ளியில் 28 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இரு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலால் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் கமலவல்லி, மாணவர்களின் குடும்பத்திற்கு தன்னால் ஆன உதவியை செய்துள்ளார். ஒவ்வொரு மாணவரின் குடும்பத்திற்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கியுள்ளார். மேலும் சிலரின் குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப்பொருட்களையும் வழங்கியுள்ளார்.
இது குறித்து தெரிவித்த ஆசிரியர் கமலவல்லி, பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே அன்றாடம் வேலைக்கு போய் வருமானம் ஈட்டுபவர்கள். கொரோனாவால் வருமானம் இன்றி தவிக்கும் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய நினைத்தேன் என தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளி ஆசிரியரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஒரு மாதத்திற்கு பின் வீடு திரும்பிய செவிலியர்: மலர்தூவி வரவேற்பு அளித்த அக்கம்பக்கத்தினர்!
Loading More post
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'