கொரோனா வைரஸ் தொடர்பாக சீனாவும், அமெரிக்காவும் மாறிமாறி குற்றம்சாட்டி வரும் நிலையில் கொரோனா குறித்து அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்
அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்திருக்கும் நிலையில், வைரஸ் பற்றிய போதிய தகவல்களைச் சீனா பகிரவில்லை என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கொரோனாவை சீனாதான் உருவாக்கியது என்றும் அதற்கான ஆதாரம் உள்ளது என்றும் தெரிவித்து வருகிறார்.
மேலும்,கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் கண்டறிவதற்காக தங்களது விசாரணைக் குழுவை வுஹான் நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால் சீனா மறுத்துவிட்டது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஆரம்பம் முதலே மறுப்பு தெரிவித்து வரும் சீனா, அமெரிக்க ராணுவம் தான் கொரோனாவை உருவாக்கி இருக்க வேண்டுமென பதில் கூறியது.
இது தொடர்பாக பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், எந்த நேரத்திலும் உலகின் எந்தவொரு நாட்டிலும் அந்த வைரஸ் தோன்றலாம் என்றும், எனவே இந்த விவகாரத்தில் சீனாவைக் குற்றம்சாட்ட வேண்டாம் என்றார். மேலும், வைரஸை சீனா உருவாக்கிப் பரப்பிவிடவில்லை என்பதை அமெரிக்கா உணர வேண்டும் .வைரஸ் பரவிய நாள் முதல் அது தொடர்பான தகவல்களை உலக நாடுகளிடம் வெளிப்படையாகப் கூறி வருகிறோம் என விளக்கம் அளித்தார்.
கொரோனா வைரஸ் தொடர்பாக சீனாவும், அமெரிக்காவும் மாறிமாறி குற்றம்சாட்டி வரும் நிலையில் கொரோனா குறித்து அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா விலங்குகளிடம் இருந்து பரவியதா அல்லது சீனாவில் ஏதேனும் ஆய்வகத்தில் இருந்து விபத்தின் விளைவாக வெளியேறியதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.
Loading More post
கெஜ்ரிவால் 'நேரலை' சர்ச்சை: பிரதமர் கண்டிப்பு; வருத்தம் தெரிவித்த டெல்லி முதல்வர் அலுவலகம்
தமிழகத்தில் 13,000-ஐ தாண்டியது ஒருநாள் கோரோனா பாதிப்பு - 78 பேர் உயிரிழப்பு
'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பிற மாநிலங்களுக்கும் உதவும் ஒரே ஆக்சிஜன் உபரி மாநிலம்! - 'கேரள மாடல்' சாத்தியமானது எப்படி?
எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் டெல்லி: அதிர்வூட்டும் பின்புலமும் கள நிலவரமும்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை