கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதற்கான ஆன்டி வைரல் மருந்தை Glen mark pharmaceutical நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அதை மனிதர்களிடம் அளித்து பரிசோதிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1074 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கிறார்கள்.
மத்திய அரசின் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற அனுமதியை பெற்றுள்ள முதல் நிறுவனம் கிளென்மார்க் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபவிப்ரவிர் என்ற இம்மருந்தை குறைந்த மற்றும் மிதமான பாதிப்பு கொண்ட கொரோனா நோயாளிகளிடம் செலுத்தி 28 நாட்கள் வரை சோதனைகள் நடைபெறும் .
இதில் மருந்தின் குணப்படுத்தும் திறன் தெரிந்துவிடும் என்றும் கிளென்மார்க் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு துணைத் தலைவர் சுஷ்ருத் குல்கர்னி தெரிவித்தார். கொரொனாவை குணப்படுத்துவதற்காக அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் தீவிரமாக ஆய்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
உ.பி: ஞாயிறுகளில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாமல் 2-ம் முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம்
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்