கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை புத்திசாலித்தனமாக தளர்த்த வேண்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
காணொலி வாயிலாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கொரோனா ஊரடங்கு மற்றும் பொருளாதார நிலை குறித்து ரகுராம் ராஜனிடம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது பேசிய ரகுராம் ராஜன், மக்களை எப்போதும் முடக்கத்திலேயே வைத்திருப்பது எளிது என்றும், ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவ 65 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். பொது முடக்கத்தை தளர்த்துவதில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், நீண்ட நாட்களுக்கு உணவளிக்கும் திறன் இந்தியாவுக்கு இல்லாததால், நாம் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என யோசனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்டுப்பாடுகளை தளர்த்தும்போது யாராவது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தியிடம் அவர் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் கனவாகிப்போன பருவகால சுற்றுலா... 400 கோடி இழப்பு..?
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'