(கோப்புப் புகைப்படம்)
ராமநாதபுரம் மாவட்டத்தில் களப்பணியாற்றி வந்த காவலர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் வெளியே வராமல் தடுக்க காவலர்களும், மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க சுகாதாரப் பணியாளர்களும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தமிழக கலைஞர்கள் - மீட்க அரசுக்கு கோரிக்கை
அந்த வகையில், ராமநாதபுரத்திலும் காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவலர் மற்றும் பனைக்குளத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் மற்றும் உச்சிப்புளியைச் சேர்ந்த டெங்கு தடுப்பு பணியாளர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மூன்று பேரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா பாதித்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதில்,10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Loading More post
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை