சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மேலும் இரு காவலர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக்காவலருக்கு மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை தொடர்ந்து அவரை ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைப்போல, நுங்கம்பாக்கம் உளவுத்துறை காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்க உள்ளனர். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, உதவி ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைவரும் கொரோனா மருத்துவ பரிசோதனை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மேலும் இரு காவலர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலையில் முதல் நிலை காவலருக்கும், உளவுத்துறை காவலருக்கும் கொரானா தொற்று உறுதியான நிலையில் தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஒருவருக்கும், ஆண் காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!