கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகள் மற்றும் மேல் மலைப்பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றன.
ஊரடங்கு உத்தரவு எல்லாம் மனிதர்களுக்குத்தான். பறவைகளுக்கு இந்தத் தடையாணை எல்லாம் பொருந்தாது. ஆகவேதான் அவை உலகை மிக உல்லாசமாகச் சுற்றித் திரிந்து வருகின்றன. அதுவும் சுற்றுச்சூழலைக் கொடுக்கும் வாகன போக்குவரத்து இல்லை எனத் தெரிந்தவுடன் மலைப் பிரதேசங்களில் மறைந்து வாழ்ந்த வரையாடு போன்ற விலங்கினங்கள் தார்ச் சாலைகளில் வந்து தவம் கிடக்கின்றன.
இந்நிலையில், கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகள் மற்றும் மேல் மலைப்பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளில் மயில்களுக்கான பிரபல பகுதியாக மயிலாடும் பாறை உள்ளது. கோடைக் கால மழைக்கு, இந்தப் பகுதியில் உள்ள பாறைகளில் அதிக அளவிலான மயில்கள் கூட்டம் கூட்டமாக தோகைவிரித்தாடும் கண்கொள்ளாக்காட்சி காணலாம். அதற்கான பகுதியாக இந்தத் தலம் புகழ்பெற்றது. ஆகவேதான் மயிலாடும் பாறை எனக் காரணப்பெயர் வந்தது.
இந்தப் பகுதிகளில் சமீபத்தில் அதிக அளவிலான மயில்கள் வருகையைக் காண முடிகிறது. கோடை மழையில் நனைந்த மயில்கள், மரக்கிளைகளில் அமர்ந்து, இறக்கைகளை உலர்த்துவதும், அங்கும் இங்கும் பறப்பதுமாக இந்தப் பகுதிகளில் நிகழ்கிறது. மேலும் மேல் மலைப்பகுதிகளிலும் மயில்கள் வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளதாக மேல்மலையினர் தெரிவிக்கின்றனர்.
Loading More post
முத்தூட் பைனான்ஸ் கொள்ளை: சினிமாவை மிஞ்சும் சிசிடிவி காட்சிகள்
கங்காரு பொம்மை வடிவில் உருவாக்கப்பட்டிருந்த கேக்கை வெட்ட மறுத்த ரஹானே!
காஞ்சிபுரம்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விபத்துகளும் மரணங்களும்
ஓப்பனிங்.. அதிரடி.. பழைய உத்தப்பாவை மீண்டும் உசுப்ப கணக்கு போடும் சிஎஸ்கே?!
தொடர் சிகிச்சையில் சசிகலா... முழு விவரம் தருகிறதா இந்த மூன்று நாள் ஹெல்த் அப்டேட்ஸ்?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’