கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகள் மற்றும் மேல் மலைப்பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றன.
ஊரடங்கு உத்தரவு எல்லாம் மனிதர்களுக்குத்தான். பறவைகளுக்கு இந்தத் தடையாணை எல்லாம் பொருந்தாது. ஆகவேதான் அவை உலகை மிக உல்லாசமாகச் சுற்றித் திரிந்து வருகின்றன. அதுவும் சுற்றுச்சூழலைக் கொடுக்கும் வாகன போக்குவரத்து இல்லை எனத் தெரிந்தவுடன் மலைப் பிரதேசங்களில் மறைந்து வாழ்ந்த வரையாடு போன்ற விலங்கினங்கள் தார்ச் சாலைகளில் வந்து தவம் கிடக்கின்றன.
இந்நிலையில், கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகள் மற்றும் மேல் மலைப்பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளில் மயில்களுக்கான பிரபல பகுதியாக மயிலாடும் பாறை உள்ளது. கோடைக் கால மழைக்கு, இந்தப் பகுதியில் உள்ள பாறைகளில் அதிக அளவிலான மயில்கள் கூட்டம் கூட்டமாக தோகைவிரித்தாடும் கண்கொள்ளாக்காட்சி காணலாம். அதற்கான பகுதியாக இந்தத் தலம் புகழ்பெற்றது. ஆகவேதான் மயிலாடும் பாறை எனக் காரணப்பெயர் வந்தது.
இந்தப் பகுதிகளில் சமீபத்தில் அதிக அளவிலான மயில்கள் வருகையைக் காண முடிகிறது. கோடை மழையில் நனைந்த மயில்கள், மரக்கிளைகளில் அமர்ந்து, இறக்கைகளை உலர்த்துவதும், அங்கும் இங்கும் பறப்பதுமாக இந்தப் பகுதிகளில் நிகழ்கிறது. மேலும் மேல் மலைப்பகுதிகளிலும் மயில்கள் வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளதாக மேல்மலையினர் தெரிவிக்கின்றனர்.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?