உத்திர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ளூர் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிக்கான கால நேரமும் பகுதிக்கு பகுதி வேறுபடுகிறது. அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புஜ்புரா பகுதியில் காய்கறி விற்பதற்கான நேரமானது காலை ஆறு மணியிலிருந்து 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த புதன் கிழமை காவலர்கள் விதிகளின் படி கடைகள் மூடப்படுகிறதா என்பதை சோதனை செய்ய அங்கு வந்துள்ளனர்
கொரோனா எங்கிருந்து உருவாகி இருக்கும்? - விளக்கம் அளித்த உலக சுகாதார அமைப்பு
அப்போது தள்ளுவண்டிகளில் காய்கறி விற்பவர்கள் விலை நிர்ணயம் குறித்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மோதலை தடுக்க முற்பட்டனர். இதில் உள்ளூரில் வசிக்கும் ஒரு குழுவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது உள்ளூர் மக்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசியதில் ஒரு காவலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களும் உள்ளூர் மக்களை விரட்டியடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?