(கோப்பு புகைப்படம்)
ரமலான் மாதம் அடுத்த வாரம் தொடங்கும் நிலையில் நோன்பு கஞ்சியை பள்ளி வாசல்களில் வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கொரோனா குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசும்போது தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். தமிழகத்தில் அரசின் நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதாகவும், அடுத்தடுத்த நாட்களில் கொரோனா வைரஸ் முற்றிலும் குறைந்து, வரும் 4 அல்லது 5 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு புதிதாக இல்லை என்ற நிலை உருவாகும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 65 லட்சம் மூன்றடுக்கு முகக்கவசங்கள், 3 லட்சம் ‘என்95’ முகக்கவசங்கள் உள்ளதாகவும் இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இன்னும் ரேபிட் கிட் வரவில்லை என்றும் தெரிவித்தார். தமிழகத்திற்குத் தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 118 லிருந்து 180 ஆக உயர்ந்திருப்பதாகக் கூறினார். கொரோனா வைரஸில் கூட திமுக அரசியல் செய்வதாகவும், அது கவலை அளிப்பதாகவும் தெரிவித்துக்கொண்டார்.
இதனிடையே ரமலான் மாதம் அடுத்த வாரம் தொடங்கும் நிலையில் நோன்பு கஞ்சியை பள்ளி வாசல்களில் வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளி வாசல்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் பச்சரிசி வரும் 19ஆம் தேதிக்குள் அளிக்கப்பட்டுவிடும் என்றார்.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்