பழனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து குணமடைந்து வீட்டிற்கு திரும்பியவரை பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதிக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் 5பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வசித்த வீடுகளைச் சுற்றிய பகுதிகள் முழுவதும் தனிமை படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கரூரில் சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர், சிகிச்சை முடிந்து மீண்டும் பழனிக்கு திரும்பி விட்டார்.
சிறைக்கைதிகள் இருவருக்கு காய்ச்சல் - ரத்த மாதிரிகள் ஆய்வு..!
இதுகுறித்து தகவலறிந்து அண்ணாநகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட நபரை பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து வந்த மருத்துவர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கொரோனா கொடூரம் : எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் உயிரிழப்பு?
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபரை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்றும், அவரை பழனி அரசு மருத்துவமனையில் வைத்து கண்காணித்துக் கொள்வதாகவும் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
Loading More post
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
தமிழகத்தில் பேருந்து வேலைநிறுத்தம்: மிகக்குறைவான பேருந்துகள் இயக்கம் -பயணிகள் அவதி
பிரதமர் மோடி இன்று தமிழகம், புதுச்சேரி வருகை
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!