குஜராத் முதல்வர் விஜய் ரூபானியை சந்தித்த எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.
குஜராத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காந்தி நகரில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில துணை முதல்வர் நிதின் பட்டேல், மாநில உள்துறை அமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில், உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்ற ஹாடியா-ஜமால்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் கிடவாலாவுக்கு நேற்று மாலை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் கொரோனா பரவியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எம்எல்ஏ இம்ரானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை தனிமைப்படுத்திக்கொண்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!