காலி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயார் என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 13 ஆம் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்படுத்ததையடுத்து ஏப்ரல் 15 ஆம் தேதி போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்தது.
"இந்தியர்கள் மட்டுமே விளையாடினால் நல்லது"-ஐபிஎல் அணியின் "ஐடியா" !
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 25 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் உடனடியாக ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கும் வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் ஊரடங்கு தேதியை நீட்டிக்கவும் மத்திய அரசு யோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் ஹர்பஜன் சிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நடத்திய பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார், அதில் " ரசிகர்களின் உடல்நலன் மிகவும் முக்கியம், போட்டி நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டால், காலி மைதானத்தில் ஐபிஎல் ஆட்டங்களை விளையாடத் தயார். அப்படி விளையாடும்போது மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவு விளையாடும்போது கிடைக்காது தான். ஆனால் காலி மைதானத்தில் ஐபிஎல் நடைபெற்றால் குறைந்தபட்சம் அவர்கள் தொலைக்காட்சியிலாவது ஆட்டங்களை ரசிப்பார்கள்" என்றார்.
ஐபிஎல் இல்லையென்றால் சம்பளம் இல்லை : கலக்கத்தில் அறிமுக வீரர்கள்..!
மேலும் தொடர்ந்த அவர் " மேலும் வீரர்களின் நலனில் நாம் அக்கறை செலுத்தவேண்டும். கிரிக்கெட் மைதானம், வீரர்கள் தங்கும் விடுதிகள் என அனைத்தும் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு பின்பு சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். கொரோனா பாதிப்பு முற்றிலும் சீரானதும் ஐபிஎல் போட்டி நடத்தப்பட வேண்டும்" என்றார் ஹர்பஜன் சிங்.
Loading More post
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
ஐபிஎஸ் அதிகாரிக்கே இவ்வளவு சிக்கலென்றால் சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன?- உயர் நீதிமன்றம்
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?