விமானம் மூலம் சென்னையில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்ற 10 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு 137 பேர் நேற்று செல்ல முயன்றனர். அப்போது பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, அவர்களில் 10 பேர் கடந்த மாதம் டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது தெரியவந்தது. கடந்த மாதம் சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்த அவர்கள் டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து தென்காசியில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் சில நாட்கள் தங்கியுள்ளனர்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா : எந்தெந்த மாவட்டங்கள்.. எத்தனை பேருக்கு?
இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வெளிநாட்டுக்கு செல்ல விமானம் தடை செய்யப்பட்டதால் அவர்கள் மலேசியா திரும்ப முடியாமல் தென்காசியிலேயே இருந்துள்ளனர். இதையடுத்து மலேசியாவுக்கு சிறப்பு விமானம் இயக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர்கள் மலேசியா செல்ல முயன்றது தெரியவந்தது. இதனால் அவர்கள் 10 பேர் மட்டும் மலேசியா செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனைத்தொடர்ந்து 127 பேர் மட்டும் மலேசியா செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து பிடிபட்ட 10 பேரையும் குடியுரிமை அதிகாரிகள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு அவர்கள் இதுவரை கொரோனா மருத்துவப் பரிசோதனை எதுவும் செய்யவில்லை என்பது தெரியவந்தது.
வல்லபாய் படேலின் சிலை விற்பனைக்கு... OLXல் பதிவிட்ட மர்மநபர் மீது வழக்குப்பதிவு!
10 பேரையும் விமான நிலைய போலீசார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து 10 பேர் மீதும் 188 (அரசு உத்தரவை மீறுதல்), 269, 270, 271 (உயிர்க்கொல்லி தொற்று நோயை பரப்புதல்) மற்றும் தொற்றுநோய் தடுப்புச் சட்டம் பிரிவு 3, வெளிநாட்டவர் தடையை மீறி தங்குதல் தடுப்புச் சட்டப்பிரிவு 13, 14, பேரிடர் மேலாண்மை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைதான பத்து பேரும் பூந்தமல்லி கொரோனா சிறப்பு சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'