விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தமிழக கூலித் தொழிலாளிகள் கோவாவில் தவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் கோவா மாநிலத்தில் உள்ள ஒரு துறைமுகத்தில் மீன் இறக்கும் வேலை செய்து வருகின்றனர். நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அவர்கள் அனைவரும் அங்கே தவித்து வருகின்றனர்.
தங்குமிடம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலையில் இருப்பதாகவும், தங்களுக்கு கொரானோ வைரஸ் தாக்கம் ஏற்பட்டு விடுமோ ? என அஞ்சுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முயற்சிகள் எடுக்க வேண்டும் என கடந்த இரண்டு தினங்களாக அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், தங்களில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா ? என மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!