கொரோனாவால் மொத்தமாக முகம் மாறி போயிருக்கிறது இத்தாலி. சீனாவின் வுகான் நகரம்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகின்
முதல் பகுதி. இன்றைய தேதி வரை சீனாவில் கொரோனாவுக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். அந்நாட்டில் இருந்து பரவிய கொரோனா இத்தாலியை படுமோசமான மரண குழியில் தள்ளிவிட்டிருக்கிறது. இதுவரை 92,472 பேர் இத்தாலியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10,023 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில், இறப்பு விகிதம் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. கொரோனாவால் எங்கு பார்த்தாலும் கொத்து கொத்தாக மாண்டு போனவர்கள், அவர்களுக்காக கண்ணீர் விடும் உறவினர்களின் மரண ஓலங்கள் என இத்தாலி முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் செய்வதறியாது இத்தாலி விழிபிதுங்கி நிற்கிறது.
இத்தாலியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறிவருகின்றன. இத்தாலியின் லம்பார்டியில் அதிக
உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா தொற்றுடன் வந்து உயிருக்குப் போராடுவோரை மீட்க, இரவு பகலாக மருத்துவக்குழுவினர்
போராடுகிறார்கள். சிறிது நேர உறக்கம், இளைப்பாறுதலோடு, முழு நேரமும் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவசரகால சிகிச்சைப்பிரிவில் மட்டும் தினசரி குறைந்தபட்சம் 40 நோயாளிகளுக்காவது சிகிச்சை தர வேண்டிய சூழல் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டைவிட்டதே அதிக உயிரிழப்புகளுக்கு காரணம் எனக் கூறப்பட்டாலும், விரைவில் இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகள் கொரோனா பிடியில் இருந்து மீண்டு வர வேண்டுமென்பதே அனைவரின் வேண்டுதலாக உள்ளது.
Loading More post
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'