நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், உசிலம்பட்டியில் உணவின்றி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ளன. இதனால் சாலையோரத்தில் பல்வேறு மனநோயாளிகள், ஆதரவற்றவர்களாக சுற்றித்திரியும் நபர்களுக்கு தன்னார்வ அமைப்பினர் ஆங்காங்கே உணவுகளை வழங்கி வருகின்றனர்.
தாய் இறந்த செய்தி கேட்டும் கொரோனா பணியை தொடர்ந்த சுகாதார அதிகாரி!!
இதனிடையே மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோஸ்ராவுத்தர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. ஆதரவற்ற முதியவரான இவர் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட காளியம்மன் கோவில் அருகே யாராவது உணவு வழங்கினால் அதை சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் பாண்டி இரு நாட்களாக சாப்பிடவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த முதியவருக்கு அப்பகுதியினர் உணவு கொடுக்க எழுப்பியுள்ளனர். அப்போது அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகர் போலிசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், சிகிச்சையும் - மாவட்டவாரியாக முழுவிவரம்
ஊரடங்கு காரணமாக முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது உசிலம்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு இது போன்ற சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவுகளையாவது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!