சீனர்கள் என தவறாகக் கருதி வடகிழக்கு மாநிலத்தவர்களை துன்புறுத்துவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிக் குழுவை பிரதமர் அமைக்க வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 9 நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 471 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனிடையே சீனர்கள் எனக்கருதி வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. எனவே நீங்கள்தான் நோயை கொண்டு வந்தீர்கள் எனக் கூறி சீனர்கள் என நினைத்துக் கொண்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீது சிலர் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
The PM must set up a special unit to monitor and deal hard with trouble makers targeting persons in Delhi who are from Northeast. These rowdies rough them up because of their ignorant belief that they are Chinese! Soon such hooliganism will spread to Pakistani look alike
— Subramanian Swamy (@Swamy39) March 23, 2020Advertisement
இதனையடுத்து சீனர்கள் என தவறாகக் கருதி வடகிழக்கு மாநிலத்தவர்களை துன்புறுத்துவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிக் குழுவை பிரதமர் அமைக்க வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், டெல்லியில் அதிகரிக்கும் இதுபோன்ற செயல்களை தடுக்கத் தவறினால், அது நாடு முழுவதும் பரவக்கூடும் என்றும் விரைவில் பாகிஸ்தானியரைப்போல இருப்பவர்களையும் தாக்கும் ரவுடித்தனத்துக்கு வழிவகுத்துவிடும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.
Loading More post
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?