கோவாவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் தேசியபற்று மிகுந்தவர்கள் என்று கூறியுள்ள அம்மாநில சிவசேனா தலைவர் சிவபிரசாத் ஜோஷி, கன்னடர்களுக்கு தேசியகீதம் கூட முழுமையாக பாடத்தெரியாது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நதிநீரை பகிர்ந்துக்கொள்வதில் பல ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருவது போல, கோவா மாநிலத்துடனும் நதிநீரை பகிர்ந்துக்கொள்ளாமல் கர்நாடக முரண்டு பிடித்து வருகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கோவா மாநில சிவசேனா தலைவர் சிவபிரசாத் ஜோஷி, கோவாவில் உள்ள இளைஞர்களும் மாணவர்களும் தேசியபற்று மிக்கவர்கள் என்றும் தேசிய நலனையே முதலில் அவர்கள் விரும்புவதாக கூறினார். மேலும் கர்நாடக இளைஞர்கள் குறித்து பேசிய அவர், அங்குள்ளவர்களுக்கு தேசியகீதம் கூட பாடத்தெரியாது, விடுதலை வீரர்கள் ஒருவரின் பெயர் கூட அங்குள்ள இளைஞர்களுக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். இருமாநிலத்திற்கும் இடையே ஓடும் மஹாதாயி மற்றும் மண்டோவி ஆகிய நதிகளை பகிர்ந்துக்கொள்வதில் தான் பல ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!