தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 500 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை : மாருதி, ஹோண்டா உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் மூடல்
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ரூ. 987 கோடி நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு நிதியாக ரூ. 60 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
"டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யும் திட்டமில்லை" - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி
இதனிடையே சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதி முடிவடைவதாக இருந்த கூட்டத்தொடர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளையுடன் நிறைவடைவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூட்டத்தொடரை புறக்கணித்த நிலையில் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு