உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இத்தாலியில் நேற்று மட்டும் 651 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14 ஆயிரத்து 613 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,261 பேர் உயிரிழந்தனர். இத்தாலியில் நேற்று மட்டும் புதிதாக 5,560 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், 651 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் இதுவரை 59 ஆயிரத்து 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.5476 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 416 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 32, 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 1,756 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 28,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97 ஆயிரத்து 636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.உடல் வெப்பநிலையைக் குறைத்துக்காட்ட மாத்திரை உண்ட இளைஞர்கள்
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!