புதுச்சேரியில் நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி ஏற்கெனவே அறிவித்தார். முன்பாக மாஹேவில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் புதுச்சேரி முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு: தமிழக அரசு
இந்நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்களுக்கு விதிவிலக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#BREAKING: புதுச்சேரிக்குள் வரும் 31 வரை வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை - முதல்வர் நாராயணசாமி | #Puducherry https://t.co/irHxpkdYCn
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 22, 2020Advertisement
Loading More post
ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!
தலைநகரை தவிக்கவைக்கும் கொரோனா: விழிபிதுங்கும் டெல்லி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள்
கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
ஏழைநாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை, பணக்கார நாடுகளிடம் அதிக தடுப்பூசி: கிரெட்டா தன்பெர்க்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்