தனியார் பேக்கரியில் உணவுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு பணம் தராமல் ஊழியர்களை பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டி பேக்கரியை சூறையாடிய மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள லாலாபேட்டை பகுதியில் தனியார் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. பிள்ளாபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் இந்தப் பேக்கரியை நடத்தி வருகிறார். குளித்தலையிலிருந்து கரூர் நோக்கி ஒரு காரில் வந்த ஐந்து பேர் இந்தப் பேக்கரிக்கு வந்து தண்ணீர் பாட்டில், பிஸ்கட், குளிர்பானங்கள் வாங்கியுள்ளனர். ஆனால் பொருட்களை வாங்கிக் கொண்டு அவர்கள் அதற்குப் பணம் தராமல் திரும்பி செல்ல முயற்சித்தனர்.
அப்போது வாங்கிய பொருட்களுக்கு பணம் கேட்ட ஊழியர்களை காரில் வந்தவர்கள் பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டி பேக்கரியில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்துள்ளனர். இதையறிந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவிக்கு வந்தபோது, அந்தக் கும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து லாலாபேட்டை காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஸ்கார்பியோ காரில் வந்தவர்கள் கரூரைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் யார்? என்ன காரணத்திற்காக கடை உடைத்தனர் என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி