கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வருகிறது. ஆட்கொல்லி நோயான கொரோனாவை விரட்ட உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொது இடங்களில் மக்கள் கூடக் கூடாது என்பதையே அரசு பிரதானமாக கூறி வருகிறது. இதனால் அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளித்துள்ளன.
இந்நிலையில் அவ்வாறு வீட்டிலிருந்து பணிபுரிபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் ஒரு மாத காலத்திற்கு பிராட்பேண்ட் சேவையை இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் விவேக் பன்சால் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிதாக பிராட்பேண்ட் இணைப்பை பெற விரும்புபவர்கள் தொலைபேசி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் நேரில் வரவேண்டிய அவசியமில்லை எனவும் விவேக் பன்சால் தெரிவித்துள்ளார்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி