பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என்று அந்நாட்டின் அதிபர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பைக் மூலம் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளார். பல முக்கிய செக்போஸ்ட்டுகளையும் கடந்து அவர் போலீஸ்க்கு டிமிக்கி கொடுத்து தப்பியுள்ளார். இந்த நபரை எப்படியாவது பிடிக்க வேண்டும் என நினைத்த போலீஸார் பல முயற்சிகளை செய்தனர். இறுதியில் ஒருவழியாக அவரை பிடித்தனர். பிடித்தவுடன் அவருக்கு தெர்மல் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு அதிக ஜூரம் இருப்பதும், உடம்பு சூடாக கொதித்ததையும் போலீஸார் அறிந்தனர்.
"கொரோனா பரவும் இடமாக நீதிமன்றங்கள் மாறக்கூடாது" நீதிபதி சந்திரசூட்
இதனையடுத்து போலீஸார் இவருக்கு கொரோனா அறிகுறி இருக்குமோ என்று சந்தேகமடைந்தனர். ஏன் உடம்பு இப்படி கொதிக்குது என அந்த நபரிடமே போலீஸார் விசாரித்தனர். அப்போது அந்த நபர் "கொரோனா வைரஸ் என்னை தாக்காமல் இருக்க வோட்கா மதுபானத்தை குடித்தேன், அதனால் உடம்பு சூடாக இருக்கிறது" என தெரிவித்தார். இதனையடுத்து கடுப்பான போலீஸார் அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை நடத்தாமல் ஆல்கஹால் சோதனை நடத்தினர். பின்பு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக அந்த நபருக்கு அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர்.
This man’s thermal scan showed 38 degrees Celsius - fever level.
While being assessed he admitted taking shots of vodka before riding because it was “alcohol” that could cleanse him before going home. He got a ticket for driving under the influence | @chiarazambrano #COVID19 pic.twitter.com/XM0B2iy1AN — ABS-CBN News (@ABSCBNNews) March 16, 2020
கொரோனா கூட்டத்திலேயே அவலம் : போதை சுகாதார ஆய்வாளரின் இழிவான செயல்
உலகின் பல்வேறு இடங்களில் மதுகுடித்தால் கொரோனா வைரஸ் தாக்காது என்ற தவறான நம்பிக்கை இருந்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் கள்ளச்சாரயம் குடித்து இறக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,500-ஐ தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்திற்கு உள்ளானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 600 எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?