மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்ட சம்பவத்துக்காக மலேசிய அதிகாரிகள் மன்னிப்பு கேட்டு அவரை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், வைகோ ஆபத்தானவர் என்றால் மலேசிய அரசு அவருக்கு எப்படி விசா அளித்தது?. விசா அளிக்கப்பட்டாலே நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு சமம். விசா அளித்த பிறகு வைகோவை அவமானப்படுத்தும் வகையில் மலேசிய அதிகாரிகள் நடந்து கொண்ட விதத்திற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நடந்த சம்பவத்திற்கு வைகோவிடம் மலேசிய அதிகாரிகள் மன்னிப்பு கேட்டு அவரை மலேசிய நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமணத்துக்காக அந்நாட்டுக்கு சென்ற வைகோவை, ஆபத்தானவர் என்று கூறி விமானநிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும், அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல் இந்தியாவுக்கு மீண்டும் திரும்ப அனுப்பவும் மலேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?