யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள ராணா கபூரின் வீடு மற்றும் அவரது மகள்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். ராணா கபூர் மற்றும் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், ராணா கபூர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை மும்பையில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் சில ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
அப்போது டி.ஹெச்.எஃப்.எல் நிதி நிறுவனத்தின் 4,450 கோடி ரூபாய் வாராக்கடனுக்கு நடவடிக்கை எடுக்காமலிருக்க 600 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதுபோன்று கடும் நிதி சிக்கலில் இருந்த சில நிறுவனங்களுக்கு தெரிந்தே அதிகளவில் கடன் கொடுத்து ஆதாயம் அடைந்ததாக ராணா கபூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து ராணா கபூரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கடன் கொடுக்கும் நிறுவனங்களிடம் லஞ்சம் பெறுவதற்காக தனது மகள்கள் பெயரில் போலியான நிறுவனம் ஒன்றை ராணா கபூர் நடத்திவருவதாக எழுந்த புகார் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராணா கபூர் தொடங்கிய யெஸ் வங்கி, வாராக்கடன் பிரச்னையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால் அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தன்வசம் கையகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாதான் வெல்லும்...! - மோடியை வம்புக்கு இழுத்த ஆஸி.பிரதமர்
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்