திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நேற்றைய உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் நடத்தும் போராட்டத்தை தடுக்கக் கோரி வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த போராட்டம் காரணமாக பள்ளிக் குழந்தைகள், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், போராட்டங்கள் தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
மிட்டாய் வாங்கி கொடுத்து 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது
இதையடுத்து பேசிய நீதிபதிகள், அனுமதிக்கப்படாத ஒரு இடத்தில் அல்லது குறிப்பிட்ட பகுதியில் போராட்டம் நடத்த எவருக்கும் உரிமையில்லை எனத் தெரிவித்தனர். போராட்டம் நடைபெறும் சாலையில் பள்ளி, மருத்துவமனைகள் அமைந்துள்ளதாகவும், இந்த போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளதால், திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
எருக்கம்பால் கொடுத்து பெண் சிசுவை கொன்ற கொடூரம் - விசாரணையில் அம்பலம்
திருப்பூர் காவல்துறைக்கு பிறப்பித்த உத்தரவு தமிழக டிஜிபி-க்கு பிறப்பித்த உத்தரவாக கருதி காவல்துறை நடவடிக்கை எடுக்க தொடங்கியதால், சில வழக்கறிஞர்கள் மீண்டும் முறையிட்டனர். அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை இன்று மீண்டும் விசாரித்தனர். அப்போது திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நேற்றைய உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதேசமயம் அமைதியான வழியில் போராடிவரும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்கில் உத்தரவு பிறப்பிக்க கூடாது எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் மார்ச் 11-ஆம் தேதி கேட்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
தமிழகம் ஏழ்மையில் தகிக்கிறது - கமல்ஹாசன்
கடையநல்லூர் தொகுதி உறுதியாகியுள்ளது - ஐயுஎம்எல்
“உலகில் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் இந்தியாதான்”- கீதா கோபிநாத்
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதிப்பங்கீடு விவரங்கள் இன்று அறிவிப்பு
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!