இயக்குநர் விக்ரமன் படத்தில் வரும் ‘எல்லா நாளும் கார்த்திகை’ பாடலை மேற்கோள் காட்டி சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல மாதங்களாகிவிட்டன. அவர் இந்த இடைப்பட்ட காலத்தில் ராணுவத்தில் இணைந்து சேவையாற்றி வந்தார். அதன் பிறகு இந்தியாவிலுள்ள சில மாநிலங்களுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார். அவர் கிரிக்கெட் ஆட்டத்தை விட்டு விலகி வாழ்ந்து வந்தாலும் அவரை அவரது ரசிகர்கள் இடைபட்ட நாளில் கொண்டாடியே வந்தனர். அவரைப் பற்றி செய்திகள் வராத நாளே இல்லை என்றுகூட சொல்லலாம். மீண்டும் அணிக்கு திரும்புவாரா இல்லையா என பெரிய பட்டிமன்றமே நடந்து வந்தது.
இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள 13 ஆவது ஐபிஎல் சீசனில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோனி விளையாட இருக்கிறார். அதற்காக அவர் ஞாயிறு அன்று இரவு சென்னைக்கு வந்துசேர்ந்தார். அதனையடுத்து நேற்று சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து பயிற்சிகளை மேற்கொண்டார். அதற்கான வீடியோ ஒன்றினை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அந்த வீடியோவை கண்ட ‘தல’ தோனியின் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கினர்.
இந்நிலையில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் மகேந்திர சிங் தோனியின் வருகையின் போது சுரேஷ் ரெய்னா கட்டித்தழுவி வரவேற்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே வெளியிட்டுள்ள வீடியோவில் தோனி, அணியின் ஜெர்சியுடன் வருகிறார். மேலும் அதற்கு முன்பாக ரெய்னா பழைய போட்டிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிடுகிறார். மிக உற்சாகமாக தோனியை அதன் பின் ரெய்னா வரவேற்கிறார். அந்த ட்விட்டர் பகுதியில் “எல்லா நாலும் எங்களின் வீட்டில் கார்த்திகை. இந்தப் படத்தை எடுத்தவர் விக்ரமன் சார்’ என நகைச்சுவையாக கூறப்பட்டுள்ளது. மேற்கொண்டு இப்பதிவுக்கு #StartTheWhistles ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Me3t and Gree7 - Everyday is Karthigai in our House, a film by Vikraman Sir. #StartTheWhistles ?? pic.twitter.com/sJz77Nnakr— Chennai Super Kings (@ChennaiIPL) March 3, 2020
சிஎஸ்கேவின் நம்பிக்கைக்குரிய ஆட்டக்காரர்களில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் எட்டு முறை ஃபைனலுக்கு சென்றுள்ளது. அதில், மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. ஆகவே ஐபிஎல் போட்டிகளில் நம்பிக்கை அளிக்கும் அணியாக சிஎஸ்கே இருந்து வருகிறது. சிஎஸ்கே போட்டிக்கு தடை விதிக்கப்பட்டபோது இரண்டு ஆண்டுகளாக குஜராத் லயன்ஸ் அணியை ரெய்னா வழிநடத்தினார். லீக் வரலாற்றில் 5368 ரன்களளை எடுத்து ரெய்னா இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” - நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புனே: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!
டாஸ்மாக்கில் ரசீது கொடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!