இந்திய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு 5 லட்சம் கோடி சரிந்துள்ளது.
இந்தியப் பங்குச் சந்தைகள் 6-ஆவது நாளாக கடும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளதால் முதலீட்டாளார்களின் பங்கு மதிப்பு ஐந்து நிமிடங்களில் 5 லட்சம் கோடி குறைந்துள்ளது. முற்பகல் 11 மணி வாக்கில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஆயிரத்து 89 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 661 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 330 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11 ஆயிரத்து 302 புள்ளிகளில் வணிகமாகியது.
இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகின்றன. சீனாவில் பெரியளவில் தாக்குதல் ஏற்படுத்திய கொரோனா வைரஸ், உலக நாடுகளிலும் பரவி வருவதால் பொருளாதார மந்தநிலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தால் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
6ஆவது நாளாக பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், சென்செக்ஸ் சுமார் 3 ஆயிரம் புள்ளிகள் வரை குறைந்துள்ளது. இதற்கிடையில், அந்நிய செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 33 காசுகள் சரிவு கண்டு 71 ரூபாய் 94 காசுகளானது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!