டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய மகளிர் அணி !

டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய மகளிர் அணி !
டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய மகளிர் அணி !

மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை‌யில், இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில்‌ நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின்
தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 34 பந்துகளில் 46 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.‌‌ பின்னர் இந்திய அணிக்கு சீரான வேகத்தில் விக்கெட்டுகள் வீழ்த்த வண்ணம்
இருந்தன.

20‌ ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் சேர்த்தது. பின்னர் களம் கண்ட நியூசிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள
முடியாமல் திணறியது. நட்சத்திர வீராங்கனைகள் ரேசல் பிரிஸ்ட், சுஸி பேட்ஸ், சோஃபி டிவைன் ஆகியோரை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செய்து இந்தியா அசத்தியது.
இருப்பினும் ஆல்ரவுண்டர் அமிலியா கேர்ரின் கடைசி கட்ட அதிரடியால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

கடைசி பந்தில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே நேர்த்தியாக பந்துவீச, இந்திய அணி 4 ரன்கள்
வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது. இந்தியா மூன்று லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது.‌
அதிரடியாக விளையாடி 46 ரன்கள் சேர்த்த ஷபாலி வர்மா ஆட்ட நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com