மதிய உணவின் போது பால் உட்கொண்ட 17 மாணவர்கள் அஜ்மீரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அஜ்மீரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் பதினேழு மாணவர்களுக்கு நேற்று மதிய உணவு பரிமாறப்பட்டது. அதனுடன் பாலும் வழங்கப்பட்டது. அதனை உட்கொண்ட மாணவர்களுக்கு குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்றுக் கடுப்பு போன்ற உபாதைகள் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து புகார் எழுந்தது. ஆகவே அர்ஜுன் பூரா கல்சா பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துடன் பேசிய தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி கே.கே.சேனி, “பதினேழு குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் உடல்நிலை இப்போது சீராக உள்ளது. அவர்கள் உட்கொண்ட உணவு மாதிரிகளை எடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரி அனுப்பப்பட்டுள்ளார். இப்பள்ளியில் மொத்தம் 80 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் 17 மாணவர்கள் உபாதை உண்டாகி இருக்கிறது. மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.
‘நான் கேரளாவுக்கு தலை வணங்குகிறேன்’- குணமடைந்த இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி பேட்டி
இந்நிலையில் அர்ஜுன் பூரா கிராமத் தலைவர் சக்தி ராவத் இது குறித்துப் பேசுகையில், அலட்சியமாக நடந்து கொண்ட பள்ளி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
Loading More post
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
வெளியானது வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி