கிருஷ்ணகிரியில் ஏடிஎம் மையத்திற்கு வரும் முதியவர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏடிஎம் மையங்களுக்கு வரும் முதியவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். அந்த நபர் பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் ஏடிஎம்-ல் பணம் எடுக்கத் தெரியாதவர்களை குறி வைத்து மோசடி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த அந்நபரை போலீசார் பிடித்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் செட்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் (55) என்பது தெரியவந்தது.
சேலம் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் காவல்படையில் பணியாற்றிய இவர், அந்தப் பணியை விட்டிருக்கிறார். பின்னர் போலி போலீஸ் அடையாள அட்டையை தயாரித்துக்கொண்டு அதன்மூலம் மோசடிகளில் ஈடுபட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பவர்களிடம் மோசடி செய்வதை தொழிலாக மாற்றியிருக்கிறார்.
இவர் பல திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். அத்துடன் பல ஏடிஎம் கார்டுகள் மற்றும் போலி போலீஸ் அடையாள அட்டையை கைப்பற்றினர். மேலும், இந்த திருட்டு சம்பவங்களில் வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
சேப்பாக்கம்-குஷ்பு; ராசிபுரம்-முருகன்; மயிலை-கே.டி.ராகவன்: லீக் ஆன பாஜக உத்தேச பட்டியல்!
விஜயகாந்த் தலைமையில் தேமுதிக வேட்பாளர்கள் நேர்காணல் தீவிரம்!
"எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது!” - மக்கள் நீதி மய்யம்
"கண் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்!" - கே.எஸ்.அழகிரி விளக்கம்
பாஜக போட்டியிடும் 20 இடங்களிலும் திமுக அணிக்கே வெற்றி: தொல்.திருமாவளவன் சிறப்பு நேர்காணல்
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?